tag:blogger.com,1999:blog-31130973443152726262024-02-06T20:43:40.936-08:00ரேடியோ மோகன்..யாருலே அது... நச்சு நச்சுனு ரேடியோ பெட்டி கணக்காராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-6209159127784381742012-11-12T23:14:00.000-08:002012-11-12T23:14:03.171-08:00கேட்டதில் வெடித்ததுசென்னையில்<br />
குழந்தைகள் பட்டாசு வெடிக்கிறார்கள்<br />
சிவகாசியில்<br />
பட்டாசுகள் குழந்தைகளை வெடிக்கின்றன ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-23100579727900790912012-09-08T12:16:00.000-07:002012-09-08T12:16:19.301-07:00அவசரமாய் கிளம்பி வந்துவிட்டேன்அவசரமாய் கிளம்பி வந்துவிட்டேன். அலைபேசி கதறலில் நனைந்துவிட்டு, குளியலறையில் கொஞ்சம் அழுதுவிட்டு, கடலுக்கும் காற்றுக்கும் முத்தமிட்டு.. தாய்நாடு திரும்புவதாய் எண்ணி இங்கு வந்துவிட்டேன். வந்தபின்னும் ஒரு அகதி மன நிலையிலேயே அலைந்து திரிகிறேன். கற்றுக்கொண்டவையும் பெற்றுக்கொண்டவையும் பல. சுட்டு கொண்டு நொந்தவையும் பல.<br />
<br />
பாதியில் விட்டு வந்த நாடகம் - தம்பி கிருஷ் இருக்கிறான். பார்த்து கொள்வான்.<br />
எழுத மறந்த பாடல் - இன்னொரு ராகம் பிரஜீவ் தருவான்<br />
உடையாது விட்ட குடுவை - பிரஷாந்த் ஒவ்வொரு கோப்பையிலும் என் பேர் சொல்லுவான்.<br />
பொக்கிஷமான புத்தக குவியல் - அஞ்சல் செய்வாள் கவீதா<br />
<br />
எனினும் என்ன<br />
யாரால் சரி செய்ய கூடும்?<br />
கூடறுத்த என் சிறகின் முறிவை?ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-10620944777768817262012-09-08T11:00:00.001-07:002012-09-08T11:00:52.943-07:00அத்தான்கள்
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUnHeZSGGBXaB5jpwoFm298ZssVcLziksyiaPgubkWYX9yMbEHw5ROtuDD376cV6RX4J_J9KdG_DTpplqUOufEivz38j7QgCK5Ru6hozBbvGiuXUsTp6QWwITI4mi2x3DNrmgLvaLO1NM/s1600/3643929380_30493ffca7_m.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="240" width="173" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUnHeZSGGBXaB5jpwoFm298ZssVcLziksyiaPgubkWYX9yMbEHw5ROtuDD376cV6RX4J_J9KdG_DTpplqUOufEivz38j7QgCK5Ru6hozBbvGiuXUsTp6QWwITI4mi2x3DNrmgLvaLO1NM/s320/3643929380_30493ffca7_m.jpg" /></a></div>
ஜி நாகராஜன் காலத்தால் நிலைத்திருக்கும் எழுத்தாளன். இவன் காலத்தில் எல்லோரும் பாரத தேசமென்று தோள் கொட்டிய போதும், இவன் பரத்தையாரின் அத்தான்கள் குறித்து தேள் கொட்டியவன். 'குறத்தி முடக்கு' இவரது ஆக சிறந்த படைப்பு. மற்றொரு நாவலான 'நாளை மற்றுமொரு நாளே' அதிகம் சிலாகிக்க படுகிறது.
அடியேன் வாசிப்பில் இரு நாவலுமே ஒரே கதையின் இரு பாகங்கள் போல தோற்ற மயக்கம் கொடுக்கின்றன.ஒரு கதை வைத்து இரு நாவல் எழுத படலாம். ஆயின் ஒரே எழுத்தாளனின் இரு நாவலில் ஒரே கதை இருப்பது ஒரு மோசடி இல்லையா?ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-63762428044672242812012-09-08T10:47:00.003-07:002012-09-08T10:47:58.047-07:00மீண்டும் வலைநெடு நாள் கழித்து மீண்டும் வலை வீச வருகிறேன்.. இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய பின் , இப்போது காலம் கொஞ்சம் மாறி இருக்கிறது. இனியேனும் அடிக்கடி பதிவிட வேண்டும்.முயல்கிறேன். ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-4838789528824060702011-08-31T07:29:00.000-07:002011-08-31T07:34:24.943-07:00அரசாங்க இசை விழாஇலங்கை அரசாங்க இசை விழாவில், 2010ம் வருடத்தின் சிறந்த பாடல் வரிகளுக்கான 'திறமை சான்றிதழை' அடியேன் வென்றுள்ளேன். தேசிய அளவில் கிடைத்த அங்கீகாரம் ஊக்கம் அளிக்கிறது .'கேட்கிறாய் அன்பே' பாடலை எழுத வாய்ப்பு தந்த பிரஜீவ், பாடிய பிரதீப், கலை கலாசார திணைக்களம், நலன் விரும்பிகள் யாவருக்கும் நன்றி.
<br />
<br />கேட்கிறாய் அன்பே எந்தன் இதயத்தை
<br />பார்கிறேன் அதில் உந்தன் உருவத்தை... ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-75299517757291339822011-08-16T02:09:00.000-07:002011-08-16T02:12:35.931-07:00அவன் இவன்அன்பு இளவல் கிரிஷின் வலைப்பூவில் என்னை குறித்த சில பகிர்வுகள். வாசிக்க சொடக்கவும் http://natchathiraveedhiyil.blogspot.com/2011/08/blog-post.html
<br />
<br />நன்றிராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-14062706980022285942011-08-03T23:50:00.000-07:002011-08-03T23:57:55.546-07:00விருது<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij60Ja4NBmpkyBJ5K-hUzfoFTgRSMssZfJ7Yoo4x4dTgCMFBz5rkHHJ60D7nW-hNrpNHKhdvxv8LgO1lHlwlWVbs5AotOEEev12iMhwxdBSnEfHcpALiem79aLIvt5RZGfqTc48amPyMs/s1600/198715_225261450851987_100001044023581_699283_6794436_n.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij60Ja4NBmpkyBJ5K-hUzfoFTgRSMssZfJ7Yoo4x4dTgCMFBz5rkHHJ60D7nW-hNrpNHKhdvxv8LgO1lHlwlWVbs5AotOEEev12iMhwxdBSnEfHcpALiem79aLIvt5RZGfqTc48amPyMs/s320/198715_225261450851987_100001044023581_699283_6794436_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5636891415149605202" /></a><br /><br /><br />இந்த வருடத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருது அன்பு நண்பன் சித்தனுக்கு கிடைத்திருக்கிறது. இது துவக்கம் மட்டுமே. இனி தான் சித்து விளையாட்டே. வாழ்த்துக்கள் தோழா. நன்பேண்டா..ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-7690216666695581922011-06-11T22:10:00.000-07:002011-06-11T22:12:27.575-07:00Thanks : Colombo university, Tamil union<br />,uhr;Nkhfd.; rf;jpg; gz;giyapd; gpugy;akhd fiyQh;. rpdpkhtpd; jhf;fj;jhy; eyptile;J NghapUf;Fk; ehlfj; Jiwapd;>El;gkhd jsq;fspy; ,aq;Fk; ,sk; ,af;Fdh;. ,th; fijfs; xt;nthd;Wk; fhw;wiyapy; itf;fg;gLk; ntw;wpf; fy;ntl;L. <br /><br />nghd;dpapd; nry;td; ehtiyAk; gy rhpj;jpuj; jfty;fisAk; Nrh;j;J ,th; cUthf;fpa ‘khtPud; te;jpaj;Njtd’;>thndhyp tuyhw;wpy; khngUk; ntw;wpfz;l rhpj;jpuj; njhluhFk;. Mrpa gRgpf; xypgug;G $l;likg;gplk; rh;tNjr rpwe;j ehlfkhf ,J ghpe;Jiuf;fg; gl;Ls;sJ. rhpj;jpuj; njhlhpd; ntw;wpiaj; njhlh;e;J rhfrj; njhluhk; ‘mNugpa ,uTfis’ kf;fSf;F toq;fp tUfpwhh;. NkYk; ngz;zpa tpLjiyia Kd;itf;Fk; ‘kfhy\;kp’ GJikj; njhliu vOjp ,af;fp tUfpwhh;. xU gf;fk; rhpj;jpuk; rhfrk; GidAk; ,th; kWgf;fk; jf;fhspj; jpNal;lh;>nul;ilthy; Nghd;w eifr;Ritr; rpj;jpuq;fisAk; jPl;b tUfpwhh;. gy;NtW ghly;fisAk;> Fwpapirf; ftpijfisAk; vOjpAs;shh;.<br /><br />nfhOk;Gj; jkpo;r; rq;fj;jpd; ,yf;fpaf; $l;lq;fspy; ftpij fij Fwpj;J ,th; Mw;wpa ciufs;>kq;fh Kof;fkha; epiy ngw;wit. gy;NtW vOj;jhsh;fspd; gilg;GfisAk; gFg;gha;T nra;J fUj;Jiu toq;fpAs;shh;. fhjypNahL Rw;w Ntz;ba gUtj;jpy; fij nrhy;ypfNshLk; ftpQh;fNshLk; Rw;wpj; jphpfpwhh;. <br /><br /><br />khw;Wf; fUj;Jf;F kjpg;gspf;Fk; ,tuJ tpthj epfo;r;rpahd rhpah- jtwh? LMRB jug;gLj;jypy; gy Mz;Lfsha; Kjyplj;jpy; cs;s epfo;r;rpahFk;. Clfj;jpy; kf;fSf;F nghOJ Nghf;Fk; gilg;Gfs; kl;Lky;yhJ mth;fisg; gOJghh;f;Fk; gilg;Gfis cUthf;fp tUfpwhh;.<br /><br />jdf;Ff; fpilf;Fk; ve;j tpUJk; jdf;fhdJ my;y> fiyg;grpNahL Rw;wpj; jphpAk; fhdf thrpfs; ahtUf;Fkhd mq;fPfhuk; vd;fpwhh; ,uhr;Nkhfd.;ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-33806484586994353642011-06-11T17:38:00.000-07:002011-08-04T00:00:48.374-07:00தமிழ் கலைக் காவலன்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiicVULb1sGLSmGP-_YBcnp-UwNYvUHVU4pZWIWbFhYQdNbM6wJxVOGABBzEYc1WR1LIdO1B1ZfgtJLYHuv7SWPpH9-mCF5OXBX52rq0hHD5ZXpcdNvM2aDO_idd6kyGbGDPfUpC570y8/s1600/252985_171880632871788_100001495568373_451416_52943_n.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiicVULb1sGLSmGP-_YBcnp-UwNYvUHVU4pZWIWbFhYQdNbM6wJxVOGABBzEYc1WR1LIdO1B1ZfgtJLYHuv7SWPpH9-mCF5OXBX52rq0hHD5ZXpcdNvM2aDO_idd6kyGbGDPfUpC570y8/s320/252985_171880632871788_100001495568373_451416_52943_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5636892147210070370" /></a><br /><br /><br />கொழும்பு பல்கலைக்கழக தமிழ் சங்கம், எனக்கு கௌரவ விருது வழங்கி உள்ளார்கள் . இதை போன்ற அங்கீகாரம் மென்மேலும் உழைக்க ஊக்கத்தை தருகிறது. "எனக்கு கிடைத்திருக்கும் விருது, எனக்கானது மட்டுமல்ல.கதை, கவிதை, காவியம், மண், மானம்,நீதி,விடுதலை யாவற்றின் மீதும் தீரா காதலோடு திரியும் கானகவாசிகள் யாவருக்குமான அங்கீகாரமே இந்த விருது" <br /><br />விருது : தமிழ் கலைக் காவலன் (ஊடகம்)<br /><br />கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மன்றம், சக்தி நிர்வாகம்,சக நண்பர்கள், நேயர் நெஞ்சங்கள்,நலன் விரும்பிகள் - யாவருக்கும் நன்றிராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-4202641899849440752011-03-20T17:15:00.000-07:002011-03-20T17:17:28.154-07:00"I have spent my days in stringing and unstringing my instrument."Poets convey a timeless message. They are often key witness to history’s great<br />political and social changes. Their writings inspire us to build lasting peace in our<br />minds, to rethink relations between man and nature and to establish humanism<br />founded on the uniqueness and diversity of peoples. This is a difficult task, requiring the participation of all, whether in schools, libraries or cultural institutions. To quote the poet Tagore, the 150th anniversary of whose birth will be celebrated this year, "I have spent my days in stringing and unstringing my instrument."<br /><br />Irina Bokova,<br />Director-General of UNESCO<br />Message for World Poetry Day<br />21 March 2011ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-50558196056696031852011-01-24T00:07:00.000-08:002011-01-24T00:10:36.900-08:00பொய்யும்,பழங்கதையும்,வெறும்கனவும்கவிஞர் ஆதித்தனின் நூல் வெளியீடு மற்றும் அறிமுகம் நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில் நிகழ்ந்தது. 'பொய்யும்,பழங்கதையும்,வெறும்கனவும்' என்ற இந்நூல் ஏற்கெனவே கோவையில் இயக்குனர் சேரனின் தலைமையில் தகிதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கவிஞர் மது வழங்கினார். அதாவது கவிஞர் மதுவர்மன் தொகுத்து வழங்கினார். மு.மயூரன் வரவேற்புரை செய்தார்.அது இலக்கியவாதிகளையும், இணையவாதிகளையும் இனிப்பாய் இணைத்தது. அண்ணன் சடாகோபன் அளவான அறிமுகவுரை நிகழ்த்தினார்.தேவராஜா அய்யா வளமான கருத்துரை நிகழ்த்தினார். அடியேனும் கருத்துரைத்தேன்.<br /><br />கவிஞர் ஆதிக்கு, பாடலாசிரியர் ஆதிக்கு, எழுத்தாளர் ஆதிக்கு, பைத்தியகார ஆதிக்கு,ஆதிவாசி ஆதிக்கு, வனவாசி ஆதிக்கு, வாழ்த்துக்கள் சொன்னேன். வீட்டுக்குள் பல்லியை கூட அனுமதிக்காத நகரத்து மனிதர்கள் இடையே, புழுவோடும், பூனையோடும், நாயோடும் கவிபாடும் ஆதியை ஆதிவாசி என்றதில் என்ன தவறு? <br /><br />மரபின் மைந்தனான ஆதித்தன், புது கவிதையோடு புது மாப்பிள்ளை போல காதல் செய்திருக்கிறார். ஆனால் நெடு நாட்களாய் நவீன கவிதையோடு பங்காளி சண்டை போட்டு வருகிறார். இருந்தும் கவியில் தென்படும் படிமங்கள் விரைவில் இவர் பின்நவீன குடில் மாறும் முகாந்தரங்களை முன்னுரைக்கின்றன. நிலையாமை என்பது நிலைக்கும் தானே? <br /><br />நூலில் இருந்து சில வரிகள் :<br /><br />எம் குழந்தைகள் <br />தூக்க கலக்கத்திலேயே தூக்கிலிடப்பட்டன..<br />******************************<br /><br />மிச்ச கதைகள் கோடியுள<br />மீள இன்னோர் இரவுதனில் <br />அச்சக்கரியை வான் பூசும் <br />அந்தப்போதிர் சொல்வேன் நான் <br />*************<br /><br /> வாழ்த்துக்கள் ஆதிராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-4740341864566431952011-01-15T00:54:00.000-08:002011-01-15T01:14:29.758-08:00வெள்ளைபொங்கலோ பொங்கல்... சக்தி தொலைக்காட்சியில் வழைமை போல் இன்றும் 'சிறப்பு நேரடி நிகழ்ச்சி' செய்தேன். தீபாவளி, வருட பிறப்பு, பொங்கல் என்று ஏதேனும் பண்டிகை வந்தால், பாழடைந்து இருண்டு கிடக்கும் வீட்டை வெள்ளையடித்து அழகு பார்பது போல, என்னை வைத்து நிகழ்ச்சி செய்வது வாடிக்கை ஆகிவிட்டது.<br /> <br />நகைச்சுவை தென்றல் லியோனியின் பட்டிமன்றத்தில் பேச 2008இல் எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது. நானும் நண்பர் தேவக்கோட்டை ராமநாதனும் போட்டி போட்டு ஒப்பனை செய்துக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த லியோனி, 'என்ன தம்பிகளா.. வெள்ளை ஆயிட்டீங்களா?' என்றார். 'நாங்க வெள்ளையாவுறதா.. மேக்கப் மென் கை தான் கருப்பாச்சு' என்றேன். சிரித்தார்.ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-58772745020474102532011-01-15T00:43:00.000-08:002011-01-15T00:48:46.708-08:00சிறு துளி பெரு வெள்ளம்இன்று பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கின் சொந்தங்களுக்காக அனைவரும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதே தருணத்தில் உலகின் பல்வேறு பகுதிகளும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பது வியப்பை தருகிறது. மச்சான் 2012ல உலகம் அழிய போகுது என்றான் நண்பன். அப்படியோர் அழிவு வந்தால் கடைசி பாடலாய் எதை என் நிகழ்ச்சியில் இசைக்கலாம் என்று யோசித்து வருகிறேன்.ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-25703053824075842492010-11-26T04:17:00.000-08:002010-11-26T04:28:52.127-08:00இனி ஒரு விதி செய்வோம்உலக வானொலி சக்தி தனது பன்னிரெண்டாவது ஆண்டின் நிறைவு விழாவை பல்வேறு வகையில் சிறப்பாக கொண்டாடியது. என்பதை விட கொண்டாடினோம் என்ற பதமே சரி. இதை முன்னிட்டு பன்னிரண்டு கொள்கைகளை பிரகடனப்படுத்தினோம். மக்களின் மகத்தான ஆதரவும் அன்பும் தொடரும் என்ற நம்பிக்கை அதிகமாகி இருக்கிறது. இந்த போர் பூமியில் ஒரு தமிழ் ஊடகத்தை நடத்தும் சவால் எமக்கு பிடித்தே இருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் சக்தியாக தொடர்ந்து பணியாற்றுவோம்.இனி ஒரு விதி செய்வோம்ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-28225959483683072112010-11-26T03:59:00.000-08:002010-11-26T04:11:53.722-08:00கிழித்துப்போடுதோழர் சித்தனின் 'கிழித்துப்போடு' நூல் வெளியீடு சிறப்பாக கிழிந்தது. மக்களிசை வித்தகர்கள் தப்படித்து கிழித்தார்கள்.தலைமை அதிதிகள் மேடையில் பாவனை நூலின் போலி அட்டையை கிழித்தார்கள். மாணவ செல்வம் ருத்ர தாண்டவம் ஆடி கிழித்தார்.வீரகேசரியின் ஆசிரியர் சித்தன் என்ற எழுத்தாளனை கிழித்தார். நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் சித்தனின் 'எழுத்து' பேசும் ஆன்மீக கோட்பாடுகளை கிழித்தார். நயவுரை வழங்கிய நான் கேள்விகளின் திரைகளை கிழிக்க முயன்றேன். விழாவின் இறுதியில் காமன் கூத்து மேடையேறி கிழிந்தது.ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-1845247091433749632010-11-11T05:30:00.000-08:002010-11-11T06:38:31.957-08:00"தொலைந்து போன தமிழ் நூல்கள் "கொழும்பு தமிழ் சங்கத்தின் இலக்கிய களத்தில், வெள்ளிக்கிழமை(12:11:10) அடியேன் உரையாற்ற இருக்கிறேன். காலம் அனுமதித்தால் அவசியம் கலந்துக்கொள்ளுங்கள்<br /><br />இடம் : கொழும்பு தமிழ் சங்கம் <br />காலம் : வெள்ளிக்கிழமை 12:11:2010<br />நேரம் : மாலை 6 மணி <br />தலைமை : திரு S.எழில் வேந்தன், தலைவர், கொழும்பு தமிழ் சங்கம் <br />உரை :"தொலைந்து போன தமிழ் நூல்கள் "-இராச்மோகன் ஆறுமுகம்,சக்தி வானொலிராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-74344895010734440822010-10-29T01:02:00.000-07:002010-10-29T01:08:09.922-07:00செம்மொழி விழாமன்னார் செம்மொழி விழா மிக சிறப்பாக நிகழ்ந்தது. இலக்கிய அரங்கம், ஆய்வரங்கம், நூலரங்கம், இசைஅரங்கம் என்ற பகுப்புகளின் ஊடே செம்மொழியின் சிறப்பை நிலைநிறுத்தினர். எந்த விதமான அரசியல் சார்புத்தன்மையும் இல்லாமல், தனி நபர் துதிபாடல் இல்லாமல் , மொழி மட்டுமே பிரதானமாய் வைத்து விழா நடத்தியமை கூடுதல் சிறப்பு.நடனம், நாடகம், பட்டி மண்டபம், கவியரங்கம், பேச்சுரைகள், ஆராய்ச்சி கட்டுரைகள் என்று மன்னார் மண்ணே திருவிழா கோலம் பூண்டது.தமிழ்நேசன் அடிகளாருக்கும், சிவகரன் அவர்களுக்கும், மக்கள் காதர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். காயப்பட்ட களத்திலே தமிழே மருந்து, கவி தேடும் விழிகளுக்கு தமிழே மருந்து.ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-11621295139362102722010-10-08T00:55:00.000-07:002010-10-08T01:20:59.013-07:00ஆகல!வணக்கம் தாயகத்தில் கனாவும்,ஓசியும் 'நேயர்களே, எங்கள் அறிவிப்பாளர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?' என்று கூவியதை தொடர்ந்து குவிந்துப்போன நேயர் கேள்விகளில், என்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் எனது பதில்களும். <br /><br />கேள்வி : உங்கள் வயது என்ன? லட்சியம் என்ன?<br />பதில் : வயது நாளுக்குநாள் குறைந்துக்கொண்டே போகிறது. லட்சியம் கூடிக்கொண்டே போகிறது<br /><br />கேள்வி : ஒரு பக்கம் புலவர் போல் கவி பாடுகிறீர்கள், மறுப்பக்கம் நகைச்சுவையில் கலக்குகிறீர்கள். எப்படி? <br />பதில் : அங்கதம் என்பது தமிழர்களின் நாவில் நடனமாடும் இயல்பான ஓன்று. நற்றமிழும் நகைச்சுவையும் ஒட்டாமல் பிறந்த ரெட்டை குழந்தைகள். <br /><br />கேள்வி : ஓராண்டு நிறைவை நோக்கி வந்தியத்தேவன் வெற்றி நடைப் போடுகிறது. அடுத்து என்ன? எதிர்ப்பார்ப்புகள் எகிறுகின்றன!<br />பதில் : அந்த எதிர்ப்பார்ப்புகளை பத்திரமாய் வைத்திருங்கள். சரித்திர பயணத்தை தொடர்ந்து, மற்றுமொரு சாகச பயணம் காத்திருக்கிறது.<br /><br />கேள்வி :உங்கள் பூர்விகம்?<br />பதில் : தாத்தா கண்டி. அப்பா தலைமுறையோடு இந்தியாவிற்கு இடம்பெயர்தல்.நான் பிறந்தது, வளர்ந்தது, மலர்ந்தது எல்லாமே சிங்கார சென்னை. தற்போது வாழிடம் கொழும்பு. வருங்காலம் யாருக்கு தெரியும்?<br /><br />கேள்வி : உங்கள் குடும்பம்? <br />பதில் : ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அக்கா, ஒரு அக்கா புருஷன், ஒரு அக்கா குழந்தை. அப்பாவும் திருமணமானவர்!அம்மாவும் திருமணமானவர்! அக்காவுக்கும் திருமணமாகிவிட்டது! எனக்கு இன்னும் ஆகல!ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-70324014844153002972010-10-04T07:01:00.000-07:002010-10-04T07:24:17.119-07:00possesivenessஆண் பெண் உறவின் அகசிக்கல் புதிரானது. இந்த நொடி உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ இருவர் அதீத அன்பால் ரத்தம் சிந்திக் கொண்டு இருக்கலாம். காதலர்களை தன்னுடைமை வெறிக் கொள்ள செய்கிறது.நட்புகளையும்.<br /><br />தனக்கானது தன்னுடையது மட்டுமே என்று உரக்க கூவி அடம்பிடிக்கிறது அன்பு. அடைபட்டே கிடக்க குஞ்சு தவிக்கிறது. காலம் ஓட்டை உடைத்து விடுகிறது.இவை இரண்டுக்கும் இடையே நிகழும் தொடர் போராட்டமே உறவின் உறைநிலை உண்மை போல் தோன்றுகிறது.ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-44022428808817368862010-10-04T06:32:00.000-07:002010-10-04T06:40:31.963-07:00செமஇன்றைய மனிதனின் சொல்வளம் ஒரு வார்த்தைக்குள் முடிந்து விடுகிறது. ஊரில் மழை 'செமையா' கொட்டுது. கொடைக்கானல் காணுலா செமையா இருந்தது. செம அருவி டா. செம பொண்ணு டா. செம மேட்ச் டா. செம படம். செம பாட்டு. <br /><br />ஒரு புது இடத்தை கண்டவுடன் அதை மனதுக்குள் முழுமையாய் வாங்க முயற்சிக்காமல், புகைப்படம் எடுக்கவே பிரயத்தனப் படுகிறோம். அதுவும் வதனநூல் வெளியீடு செய்ய. விளைவு செமையாக இருக்கிறது. <br /><br />இருபது ஆண்டுகள் முன் தமிழ் சமூகத்திற்கு நிழற்பட கருவி இவ்வளவு பரிச்சயமில்லை. நாடோடிக் கதைகள் ஊடாக, நிலாச்சோறு புனைவுகளாய், ரகசிய கடிதமாய்,சொல்லாறு பாய்ந்தது.இன்றோ காண் பதிவுகள் யாவுக்குமான வாய்ப்புகள் கைப்பேசியிலேயே இருக்கிறது. சொல்லின் இருப்பை செல் திருடிக்கொண்டு இருக்கிறது.ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-10507256205467182122010-09-23T03:12:00.000-07:002010-09-23T03:21:19.745-07:00கொழும்பின் குரல்என்னை யாரேனும் அடிக்கடி பரிசோதனை செய்கிறார்கள். நான் கைகளை மேலே உயர்த்தி நிற்கிறேன். அவர்களின் சந்தேக சீழ் படிந்த கரங்கள் என் மேனியெங்கும் மேய்கிறது. என் பெயர் கேட்கிறார்கள். எங்கே இருந்து வருகிறேன், எங்கேப் போக எத்தனிக்கிறேன் என்றெல்லாம் வினவுகிறார்கள். என் அடையாள அட்டையை சோதிக்கிறார்கள். அதிலிருக்கும் நிழற்படத்தையும், என்னையும் மாறிமாறி உற்று நோக்குகிறார்கள். நான் ஒப்புமை பிழையாதிருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். நான், நான்தானா என நானே ஐயுறுகிறேன். உலகம் எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடும்படி நிச்சயமற்றதாய் இருக்கிறது.ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-56932312727273720812010-09-08T07:44:00.000-07:002010-09-08T07:54:05.011-07:00ஈழம்ராணுவ விமானத்தில் ஈழம் சென்றேன். ஒரு வாரம் தங்கினேன்.இன்று தான் கொழும்பு திரும்பினேன்.நாசி நெடுக யாழ் மண்ணின் வெப்பம் கொப்பளிக்கிறது.விரைவில் நண்பனுக்கு மடல் எழுத வேண்டும்.ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-89350648126206764202010-08-25T02:48:00.000-07:002010-08-25T03:27:52.930-07:00அவளுக்கு பேர் அடைமழை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj48oJ1JX5njBHIl2x-ulN_F0Su6dRVtYVqDGQrOWQ8IF-_gT4fsdmYdWJBoKvMFQQ2jUXVKFpwLPgHCR5IifolIZoc_LyplRvTXro33n-GRtujSCXE9xEq0hVczc0dEkIVczW6PizJy80/s1600/1.bmp"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 247px; FLOAT: left; HEIGHT: 128px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5509283064533779138" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj48oJ1JX5njBHIl2x-ulN_F0Su6dRVtYVqDGQrOWQ8IF-_gT4fsdmYdWJBoKvMFQQ2jUXVKFpwLPgHCR5IifolIZoc_LyplRvTXro33n-GRtujSCXE9xEq0hVczc0dEkIVczW6PizJy80/s320/1.bmp" /></a>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /><span style="font-family:georgia;"></span>
<br /><p>
<br /><span style="font-family:georgia;"></span> </p><p><span style="font-family:georgia;">வெளியே மழை
<br />உள்ளே நீ
<br />விட்டுவிட்டு நனைகிறது மனசு. </span><span style="font-family:georgia;">
<br />----------------------------------------------------</p></span>
<br />
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhif2nsAb-WV_0-f4gab3Um4pf4XsKOrxpzY1953pTGZjGWCTiufqXWEw0MZldh5QsVtSvxJA76RK6nHigMnqBItJIz5JRnBrI37xytBJZn-8OKG-6LzySfOLCAeP_SUcwR3rDx1EqL_8c/s1600/images.bmp"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 222px; FLOAT: left; HEIGHT: 122px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5509283820460643826" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhif2nsAb-WV_0-f4gab3Um4pf4XsKOrxpzY1953pTGZjGWCTiufqXWEw0MZldh5QsVtSvxJA76RK6nHigMnqBItJIz5JRnBrI37xytBJZn-8OKG-6LzySfOLCAeP_SUcwR3rDx1EqL_8c/s320/images.bmp" /></a>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />பைத்தியக்கார மழை.
<br />உனை தொடமுடியா துயரத்தில்
<br />ஜன்னல் கம்பியில்
<br />தூக்கில் தொங்கியது.
<br />---------------------------------------------------
<br />
<br />
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1qRzumBJbrW3e2gkEj-4O4ZRqb4-SE0sq1CejOeJE8z4DEvqKkM-zZ9EIa1Z2Umit7lypVn476_5PXt1pbjdtm8ahsgoh24Ifvfx4L14fvWlQhhEEywxndciDlpUbXYFem2YgnOXu968/s1600/untitled.bmp"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 227px; FLOAT: left; HEIGHT: 164px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5509284216671880162" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1qRzumBJbrW3e2gkEj-4O4ZRqb4-SE0sq1CejOeJE8z4DEvqKkM-zZ9EIa1Z2Umit7lypVn476_5PXt1pbjdtm8ahsgoh24Ifvfx4L14fvWlQhhEEywxndciDlpUbXYFem2YgnOXu968/s320/untitled.bmp" /></a>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />மழை பொழியாத சாலையில்
<br />நீ நடந்து வந்தாய்.
<br />யாரோ பேசிக் கொண்டார்கள்
<br />'மழை வருது போல' என்று.
<br />
<br />-----------------------------------------------------
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIqFbbI3-OB5MMmqZzrcvqQuZ7UFHa2D_ZpaZyMlUQPYo83F-m0iYqwrTaTcAwfwv9FYrc6V-MKZvjldTWmfATTBBWv7d0HHuqwS1RdUatu2Mk9Lzv0-f_uP6EFEme4DpeQSr1xWuDDYQ/s1600/betsy-watching-rain-5-27-06-a.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 164px; FLOAT: left; HEIGHT: 187px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5509285375058893026" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIqFbbI3-OB5MMmqZzrcvqQuZ7UFHa2D_ZpaZyMlUQPYo83F-m0iYqwrTaTcAwfwv9FYrc6V-MKZvjldTWmfATTBBWv7d0HHuqwS1RdUatu2Mk9Lzv0-f_uP6EFEme4DpeQSr1xWuDDYQ/s320/betsy-watching-rain-5-27-06-a.jpg" /></a>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />வீட்டில் நின்று
<br />மழையை நீ ரசித்தாய்.
<br />வீதியில் நின்று
<br />மழை உனை ரசித்தது.
<br />---------------------------------------------------
<br />
<br />
<br />உனக்கென்ன?
<br />மழையில் நனைந்துவிட்டு
<br />மறைந்துவிட்டாய்.
<br />பாவம் மழை
<br />அதற்கு ஒரே காய்ச்சல்.
<br />--------------------------------------------------
<br />
<br />
<br />காற்றின் ஈரப்பதம்
<br />அதிகரிக்கிறது.
<br />அநேகமாய் அவள்
<br />வந்துக் கொண்டிருக்கிறாள்.
<br />---------------------------------------------------
<br />
<br />"குளிருது டா"
<br />
<br />
<br />"...."
<br />
<br />
<br />"hug me"
<br />
<br />"....."
<br />
<br />"டேய்! hug மட்டும் பண்ணு.திருடா"
<br />---------------------------------------------------
<br />மழை அவளின் வாசகன்.
<br />சாரல் தவணைகளில்
<br />சந்தா செலுத்துகிறது.
<br />----------------------------------------------------
<br /><span style="font-family:georgia;">மழைக்கும் அவள் மேல்
<br />காதல் போல.
<br />வீடுவரை வந்து வழிகிறது.
<br />----------------------------------------------------
<br />மழை கண்காட்சியில்
<br />தொலைந்த சிறுவன் நான்.
<br />அவள் பேர் சொல்லி அழுகிறேன்</span>
<br /></span>ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-36437172918508900352010-08-09T07:16:00.000-07:002010-08-09T07:33:06.176-07:00முட்டை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKoZw-zmxoR8M3filSKhhIGPqEJhJa-qK8ezSSsH0ye1cEbxoO1a2GpeeTZyQgzxyQuySuOIh6KHbYWZ6nEZY69_I90KYi9kon2vBl19bJ5SWx1rrBkdSiXYRiPUzxFX_5I3oZN5lbpYw/s1600/cover_bhopal.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5503415567447802962" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 310px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKoZw-zmxoR8M3filSKhhIGPqEJhJa-qK8ezSSsH0ye1cEbxoO1a2GpeeTZyQgzxyQuySuOIh6KHbYWZ6nEZY69_I90KYi9kon2vBl19bJ5SWx1rrBkdSiXYRiPUzxFX_5I3oZN5lbpYw/s320/cover_bhopal.jpg" border="0" /></a><br /><div></div><br /><div>அமெரிக்காவில் எண்ணெய் கிணறு வெடித்தது. பாதிக்கப்பட்ட பறவைகளுக்காக பல குரல்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு இரண்டு மாதத்தில் நீதி கிடைத்தது. இதே தருணம்,போபால் விஷ கசிவால் தாலி அறுந்த இந்திய ஏழை தாய்மார்களுக்கு நீதி கிடைக்க இருபத்தி ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. நாம் ஏழைகளின் மண்ணில் பாலூட்டியாக பிறக்காமல், பசிபிக் கரையில் பறவை போல் முட்டை இட்டிருக்கலாம். வாழ்க இந்திய நீதி துறை. </div>ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3113097344315272626.post-48476815534361480202010-08-04T06:36:00.000-07:002010-08-09T07:35:42.679-07:00நேர வறுமை<span style="font-size:100%;">எல்லோர்க்குமான வானம். பொதுவாய் சுழலும் பூமி. யாவருக்குமான வாழ்வு. இருந்தும் திருவிழாவில் வாங்கிய பச்சை பலூனை போல் காலம் கண்ணுக்கு தெரியாமல் கரைந்து விடுகிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அடங்க மறுக்கும் குழந்தையின் அழுகையாய், என் நேரவறுமையின் புலம்பல் நீளுகிறது.<br /><br />இமைகள் நித்திரைக்கு கெஞ்சினாலும், இதயம் எழுத்தின் வசீகரிப்பால் விடிய விடிய வாசிக்க சொல்கிறது.<br />கால்கள் ஓய்வுக்கு விண்ணப்பித்தால்,கடமை சக்கரத்தை காலில் சேர்த்து கட்டி சுழல்கிறது. எனினும் இந்த கேட்பாரற்ற வேகமும் சுகமே. ஓடும் வரை ஓடுவோம், ஓய்வு வேண்டாம்,என்றேனும் ஒரு நிழலில் உறங்கி கொள்ளலாம். முழுதாய்.</span>ராச் மோகன்http://www.blogger.com/profile/16058578144025042428noreply@blogger.com1