Sunday, January 24, 2010

நிர்வாணமாய் - ஒரு மதுக்கோப்பை

சிறுவயது முதலே நான் பெருந்தீனிக்காரன்.எனது ஆறு வயதில், பதினாறு பூரி தின்பேன்.கடந்த இருபது வருடங்களாய், இரவு உணவு 12 மணிக்கு தான். ஜுரம் வந்தால் 10 மணிக்குள் உணவருந்த முயற்சி செய்வேன். ஆனால் மிக சரியாக ஒன்பது மணிக்கு மது அருந்த தொடங்கி விடுவேன். பிறகு பெண்களை குறித்து ரசித்து, ரசித்து பேசுவேன். எந்த பெண்ணை பார்த்தாலும் எனக்கு இச்சையே தோன்றும். மலேசியா , தாய்லாந்து கிளிகளை ராஜபோகத்தில் அனுபவித்தேன்.

இதில் எனக்கு எந்த வெட்கமும், ஒளிவு மறைவும் இல்லை. நான் வாழ்ந்த வாழ்வை பட்டினத்தாரும், அருணகிரிநாதரும் வாழ்ந்திருக்க முடியாது.ஆனால் அனைத்து ஆட்டமும் முடிய போகிறவையே. இளைஞர்களை கண்டால் ஆடி ஆடி முடிய போகிறவர்களாய் தான் தோன்றுகிறது.
(அர்த்தமுள்ள இந்து மதம்)
6000 கவிதைகள், 5000 திரைப்படங்களின் திரைப்பாடல்கள், நூற்று கணக்கான நூல்கள், ஆறு திரைப்படங்களின் தயாரிப்பு ,தேசிய விருது, சாகித்திய அகடெமி விருது, 2 மனைவிகள், 13 மழலைகள்,கோடிக்கணக்கான ரசிகர்கள், கொஞ்சம் மது, நிறைய தமிழ்.....கவியரசர் கண்ணதாசன்.அரிதாரம் பூசாத அவதாரம். பிறர் வாசிக்க, வார்த்தைகளை மட்டுமல்ல - தன் வாழ்க்கையையும் தந்தவன்.

1 comment:

  1. "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோல மயில் என் துணையிருப்பு!"

    ReplyDelete