Tuesday, February 9, 2010

அகதி முகாம்

அகதி முகாம்..
மழையில் வருகிறது
மண் வாசனை. (அறிவுமதி)
__________________________________________
துப்பாக்கி முனையில் துரத்தடிக்கப்பட்டு, பரிசோதனை கூடத்தின் பரிதாப எலிகளை போல் இரும்பு வேலிக்குள் முடக்கப்பட்ட மனிதர்களின் நாசி, யதேச்சையாய் பொழிந்த மழையால், கிளறப்பட்ட மண் வாசனையால் என்ன பாடு படும்? வரைபடங்களில் தெரியும் தேசிய எல்லைகள், நிஜத்தில் இருக்குமா என்று என் பள்ளிக்கூட பால்யத்தில் பலமுறை வியந்திருக்கிறேன். குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் அந்த கோடுகள் எம் சகோதிரிகளின் அறுக்கப்பட்ட தாலிகளாக கூட இருக்கலாம்.
.
எல்லைக்கோடும், வறுமைக்கோடுமாய் திரியும் நாங்கள் - கோடுகளால் நிரம்பி கிடக்கும் வரி குதிரைகள். போர் என்னும் சாத்தான் எங்கள் கழுத்தை கடித்து சுடுரத்தம் தோய்ந்த தசைகளை புசிக்கிறது. கஞ்சிக்கே வழியில்லாத எங்களிடம், சீருடை சிவன்கள் பிள்ளைக்கறி கேட்கிறார்கள்.
.
உலகெங்கும் திறக்கப்பட்ட அவல முகாம்களை குறித்து தொடர் பதிவுகளை துவங்குகிறேன். இந்த பதிவுகள் எந்த இயக்கத்துக்கும் சார்ந்து செல்லாமல், மனிதம் தொலைத்த விழுமியங்களை குறித்தே செல்லும் என்று நம்புகிறேன்.

_____________________________________________________
முகாம் பெயர் - மரிச்ஜ்ஹன்பி
நாடு - மேற்கு வங்கம், இந்தியா
காலம் - 1978



வங்கத்தின் போர் மேகம், பாகிஸ்தான் பிரிவினையின் போதே சூல் கொண்ட ஒன்றே. அப்போது அகதிகளாய் உருவானவர்கள் இரண்டு இடங்களில் அடைத்து வைக்க பட்டார்கள். அதில் ஓன்று தான் உப்பு கடல் சூழ் தீவான மரிச்ஜ்ஹபி (மரிச்சபி) .
.
முகாம்களில் ராணுவம் மட்டுமல்ல, காவல் துறையும் உள்ளூர் வாசிகளும் கூட அகதிகளை கொடுமை படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணம்.
.
(வலிகள் தொடரும்)

2 comments:

  1. நம்மவர் இடையே இன்னும் பதில் இல்லா கேள்விகளில் இதுவும் ஒன்று சிறந்த முயற்சி அண்ணா ..................

    ReplyDelete