Wednesday, August 4, 2010

நேர வறுமை

எல்லோர்க்குமான வானம். பொதுவாய் சுழலும் பூமி. யாவருக்குமான வாழ்வு. இருந்தும் திருவிழாவில் வாங்கிய பச்சை பலூனை போல் காலம் கண்ணுக்கு தெரியாமல் கரைந்து விடுகிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அடங்க மறுக்கும் குழந்தையின் அழுகையாய், என் நேரவறுமையின் புலம்பல் நீளுகிறது.

இமைகள் நித்திரைக்கு கெஞ்சினாலும், இதயம் எழுத்தின் வசீகரிப்பால் விடிய விடிய வாசிக்க சொல்கிறது.
கால்கள் ஓய்வுக்கு விண்ணப்பித்தால்,கடமை சக்கரத்தை காலில் சேர்த்து கட்டி சுழல்கிறது. எனினும் இந்த கேட்பாரற்ற வேகமும் சுகமே. ஓடும் வரை ஓடுவோம், ஓய்வு வேண்டாம்,என்றேனும் ஒரு நிழலில் உறங்கி கொள்ளலாம். முழுதாய்.

1 comment: