Monday, October 4, 2010

செம

இன்றைய மனிதனின் சொல்வளம் ஒரு வார்த்தைக்குள் முடிந்து விடுகிறது. ஊரில் மழை 'செமையா' கொட்டுது. கொடைக்கானல் காணுலா செமையா இருந்தது. செம அருவி டா. செம பொண்ணு டா. செம மேட்ச் டா. செம படம். செம பாட்டு.

ஒரு புது இடத்தை கண்டவுடன் அதை மனதுக்குள் முழுமையாய் வாங்க முயற்சிக்காமல், புகைப்படம் எடுக்கவே பிரயத்தனப் படுகிறோம். அதுவும் வதனநூல் வெளியீடு செய்ய. விளைவு செமையாக இருக்கிறது.

இருபது ஆண்டுகள் முன் தமிழ் சமூகத்திற்கு நிழற்பட கருவி இவ்வளவு பரிச்சயமில்லை. நாடோடிக் கதைகள் ஊடாக, நிலாச்சோறு புனைவுகளாய், ரகசிய கடிதமாய்,சொல்லாறு பாய்ந்தது.இன்றோ காண் பதிவுகள் யாவுக்குமான வாய்ப்புகள் கைப்பேசியிலேயே இருக்கிறது. சொல்லின் இருப்பை செல் திருடிக்கொண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment