Wednesday, August 25, 2010

அவளுக்கு பேர் அடைமழை











வெளியே மழை
உள்ளே நீ
விட்டுவிட்டு நனைகிறது மனசு.

----------------------------------------------------














பைத்தியக்கார மழை.
உனை தொடமுடியா துயரத்தில்
ஜன்னல் கம்பியில்
தூக்கில் தொங்கியது.
---------------------------------------------------
















மழை பொழியாத சாலையில்
நீ நடந்து வந்தாய்.
யாரோ பேசிக் கொண்டார்கள்
'மழை வருது போல' என்று.

-----------------------------------------------------















வீட்டில் நின்று
மழையை நீ ரசித்தாய்.
வீதியில் நின்று
மழை உனை ரசித்தது.
---------------------------------------------------


உனக்கென்ன?
மழையில் நனைந்துவிட்டு
மறைந்துவிட்டாய்.
பாவம் மழை
அதற்கு ஒரே காய்ச்சல்.
--------------------------------------------------


காற்றின் ஈரப்பதம்
அதிகரிக்கிறது.
அநேகமாய் அவள்
வந்துக் கொண்டிருக்கிறாள்.
---------------------------------------------------

"குளிருது டா"


"...."


"hug me"

"....."

"டேய்! hug மட்டும் பண்ணு.திருடா"
---------------------------------------------------
மழை அவளின் வாசகன்.
சாரல் தவணைகளில்
சந்தா செலுத்துகிறது.
----------------------------------------------------
மழைக்கும் அவள் மேல்
காதல் போல.
வீடுவரை வந்து வழிகிறது.
----------------------------------------------------
மழை கண்காட்சியில்
தொலைந்த சிறுவன் நான்.
அவள் பேர் சொல்லி அழுகிறேன்

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. //மழைக்கும் அவள் மேல்
    காதல் போல.
    வீடுவரை வந்து வழிகிறது. //

    good one

    ReplyDelete
  3. வீட்டில் நின்று
    மழையை நீ ரசித்தாய்.
    வீதியில் நின்று
    மழை உனை ரசித்தது.
    nice anna

    ReplyDelete