Friday, October 29, 2010

செம்மொழி விழா

மன்னார் செம்மொழி விழா மிக சிறப்பாக நிகழ்ந்தது. இலக்கிய அரங்கம், ஆய்வரங்கம், நூலரங்கம், இசைஅரங்கம் என்ற பகுப்புகளின் ஊடே செம்மொழியின் சிறப்பை நிலைநிறுத்தினர். எந்த விதமான அரசியல் சார்புத்தன்மையும் இல்லாமல், தனி நபர் துதிபாடல் இல்லாமல் , மொழி மட்டுமே பிரதானமாய் வைத்து விழா நடத்தியமை கூடுதல் சிறப்பு.நடனம், நாடகம், பட்டி மண்டபம், கவியரங்கம், பேச்சுரைகள், ஆராய்ச்சி கட்டுரைகள் என்று மன்னார் மண்ணே திருவிழா கோலம் பூண்டது.தமிழ்நேசன் அடிகளாருக்கும், சிவகரன் அவர்களுக்கும், மக்கள் காதர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். காயப்பட்ட களத்திலே தமிழே மருந்து, கவி தேடும் விழிகளுக்கு தமிழே மருந்து.

1 comment: