Friday, November 26, 2010

கிழித்துப்போடு

தோழர் சித்தனின் 'கிழித்துப்போடு' நூல் வெளியீடு சிறப்பாக கிழிந்தது. மக்களிசை வித்தகர்கள் தப்படித்து கிழித்தார்கள்.தலைமை அதிதிகள் மேடையில் பாவனை நூலின் போலி அட்டையை கிழித்தார்கள். மாணவ செல்வம் ருத்ர தாண்டவம் ஆடி கிழித்தார்.வீரகேசரியின் ஆசிரியர் சித்தன் என்ற எழுத்தாளனை கிழித்தார். நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் சித்தனின் 'எழுத்து' பேசும் ஆன்மீக கோட்பாடுகளை கிழித்தார். நயவுரை வழங்கிய நான் கேள்விகளின் திரைகளை கிழிக்க முயன்றேன். விழாவின் இறுதியில் காமன் கூத்து மேடையேறி கிழிந்தது.

No comments:

Post a Comment