Sunday, July 26, 2009

வந்தியத் தேவன்


ஹலோ யார் பேசுறிங்க?
ஹி ஹி ஹி
எப்டி இருக்கீங்க?
ஹி ஹி ஹி
என்ன பாட்டு வேணும்?
ஹி ஹி ஹி
ச்சோ ச்வீட்.. காரா பூந்தி ...


இப்படி எத்தனை நாளுக்கு தான் அரச்ச மாவையே அரைப்பது?
வானொலியில் சரித்திர கதையெல்லாம் கேட்டு எவ்வளவு காலம் ஆகிறது?
எனவே இதோ இப்போது பொன்னியின் செல்வன் சக்தியின் வானலையில் சரித்திர தொடராக வெளிவரப்போகிறது.

சரியான குரல், சரியான இசை, சரியான வசனங்கள் என்று அனைத்தையும் மிக சரியாக செய்வதற்காக எங்கள் கூட்டம் ரா பகலாய் கூடி கும்மி அடித்துக்கொண்டு இருக்கிறது. தூரத்தில் எங்கோ குதிரைகள் ஓடிவரும் குளம்படி சத்தமும், நுரைக்க பாயும் பொன்னியின் ஓசையும் கேட்கிறது. வெள்ளை புரவியில் வலம் வரப்போகிறான் வந்தியத்தேவன்
குறிப்பு 1: சுமார் இரண்டு வருடங்கள் முன்பே இந்த ஆசைக்கு அடிகோலியது அயன் புகழ் ஜகன் (நண்டு, அதாங்க தமனாவோட அண்ணன், சூர்யாவோட மச்சான்)

2. கல்கியின் நாவலோடு எனக்கு நிறைய முரண்பாடுகள் உண்டு. எனினும் மெச்சிக்கொள்ள வேண்டிய உத்திகள் பொன்னியின் செல்வனில் அநேகம்.

1 comment:

  1. வாழ்த்துக்கள்! I still haven't got the mp3 teasers!

    ReplyDelete