
நில நடுக்கம் வந்த போது எனது கடற்கரையோர அடுக்கக தொகுதியின் ஐந்தாம் தளத்தில் இருந்து வெளியேறிய அனுபவம்.
கையில் எடுத்துக்கொண்டு ஓடியது
1.செல்பேசி + மின்னேற்றி
2.ஊடக அடையாள அட்டை
3.கடவுசீட்டு
4.கல்வி சான்றிதழ்கள்
ஓடும் வழியில் செய்தது
1.அண்டை வீட்டாரை கூவி எழுப்பியமை
2.செய்தி பிரிவுக்கு தகவல் பகிர்ந்தமை
3.ஒவ்வொரு தளப்பலகனியின் ஊடே கடல் பொங்கலை அவதாநித்தமை
4.ஆங்கில திரைப்பட வசனங்களை கூறியமை (ஓடுங்க..அது நம்மள நெருங்கிடுச்சு..control rooom..over)
செய்ய நினைத்து செய்யாமல் விட்டது
அப்பாவிடம் love you சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். கடைசி வரைக்கும் சொல்ல வில்லை. சொல்ல போவதும் இல்லை. இடைவெளியின் மௌனங்களில் உறைந்திருக்கிறது அன்பின் வெப்பம்..
No comments:
Post a Comment