எல்லோர்க்குமான வானம். பொதுவாய் சுழலும் பூமி. யாவருக்குமான வாழ்வு. இருந்தும் திருவிழாவில் வாங்கிய பச்சை பலூனை போல் காலம் கண்ணுக்கு தெரியாமல் கரைந்து விடுகிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அடங்க மறுக்கும் குழந்தையின் அழுகையாய், என் நேரவறுமையின் புலம்பல் நீளுகிறது.
இமைகள் நித்திரைக்கு கெஞ்சினாலும், இதயம் எழுத்தின் வசீகரிப்பால் விடிய விடிய வாசிக்க சொல்கிறது.
கால்கள் ஓய்வுக்கு விண்ணப்பித்தால்,கடமை சக்கரத்தை காலில் சேர்த்து கட்டி சுழல்கிறது. எனினும் இந்த கேட்பாரற்ற வேகமும் சுகமே. ஓடும் வரை ஓடுவோம், ஓய்வு வேண்டாம்,என்றேனும் ஒரு நிழலில் உறங்கி கொள்ளலாம். முழுதாய்.
Showing posts with label நான். Show all posts
Showing posts with label நான். Show all posts
Wednesday, August 4, 2010
Tuesday, August 3, 2010
வாழ்க்கை - ஒரு கிலோ 60ரூபாய்
1.There's no such thing as 'hard sell' and 'soft sell.' There's only 'smart sell' and 'stupid sell.'
2.When you reach for the stars you may not quite get one, but you won't come up with a handful of mud either..
-Leo Burnett
2.When you reach for the stars you may not quite get one, but you won't come up with a handful of mud either..
-Leo Burnett
Tuesday, July 27, 2010
நிழல் சொரியும் தருவின் வேர்
எல்லோர் மனதிலும் ஒரு மரம் வேர் விட்டுள்ளது. அம்மன் கோயில் வேப்பமரம், பள்ளிகூட பூச்சி மரம், ஏரிக்கரை பனைமரம், கம்பிளி ஊரும் முருங்கை மரம், புளியங்காய் அடிக்கப் போய் கால் உடைத்த மரம், கண்ணாம்பூச்சிக்கு ஆள் ஒளியும் அரச மரம், ஊஞ்சலாடும் ஆல மரம், இப்படி எத்தனையோ.என்னுள் இரு தென்னை மரங்கள் உள்ளன. ஐந்து வயதில், அதிலிருந்து எலுமிச்சை அளவில் ஒரு தென்னங்காய் என் உச்சி மண்டையில் சுர்ரென விழுந்தது. உடனே ஆப்பிள் விழுந்த நியூட்டன் போல என் ஞான கண் திறந்து , ஒரு யோசனை உதித்தது.
தரை எங்கும் அது போல் சிதறி கிடந்த காய்கள் அனைத்தையும் யாருக்கும் தெரியாமல் பழைய கூடையில் ஒளித்து வைத்தேன். என்றேனும் அவை வளர்ந்து பெரிய இளநீராகும் என்று நம்பினேன்.ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ஆரம்பித்த காய்கள், மூன்றாம் வகுப்பு வரை சென்றது.
ஒரு நாள் அப்பா அனைத்தையும் பார்த்து விட்டார். நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீசி எரிந்து விட்டார். பிறகு வெகு காலம் அவை எங்கோ தூரத்தில் நான் இல்லாமல் அனாதையாக வளர்வதாய் நினைத்து புலம்புவேன்.
மரங்களுக்கு ஏன் அநாதை விடுதிகள் இல்லை என்றெல்லாம் யோசிப்பேன். அனைத்திலும் கொடுமையான விஷயம் பிறகு நடந்தது தான். அது என்னவென்றால்..
.
.
உதிர்ந்த காய் இளநீராய் மாறாது என உணர்ந்து கொள்ளும்படி நான் வளர்ந்துவிட்டேன்...
உதிர்ந்த காய் இளநீராய் மாறாது என உணர்ந்து கொள்ளும்படி நான் வளர்ந்துவிட்டேன்...
Monday, July 12, 2010
ஓர் அறிக்கை
வெப்ப மண்டல வாழ்கையில் வளர்ந்த என்னால் உரக்க கூவி பேசாமல் இருப்பது கடினம். கடைசி பகலின் கடைசி மனிதன் சாவை முத்தமிடும் முன், உலகில் உருவான லட்சக்கணக்கான வார்த்தைகளையும் பசியுடன் பேசி தீர்ப்பதை போல் பேசி தீர்த்துவிடுவேன். சத்தமாய் பேசுவது என் மரபணு மூலக்கூறுகளில் ஒன்று. உறையும் மௌனங்களை உடைக்க மொழியோ, திரையோ, இயற்கையோ, உளவியலோ, எதோ ஓர் ஆயுதம் நாவில் சிக்கி விடும்.
ஆனால் அண்மை கால பெருவெளியில், என்னை நானே மௌனத்தின் குகைக்குள் நடுங்கும் கரத்தால் ஒளித்து, ஒளிந்து பதுங்கி கொள்கிறேன். ஏதேனும் சொல் யாரேனும் ஒருவரை கிழித்துவிட கூடாது என்பதால். உண்மையின் சுவை உவர்க்கும் என்பதால். ஆள்காட்டி விரல் வியர்க்கும் என்பதால். வார்த்தைகளின் வெப்பநிலை தாளாமல் சுற்றம் சுட்டுவிடும் என்பதால்.
வானம் பெரிது. யாவருக்காகவும் மழை பொழியட்டும். காற்றின் தாள்களில் நிரந்தரமாய் நிர்வாணம் எழுதிவிடுகிறேன்.எழுதுகோல் , எரிமை, எழுத்து, எழுதும் என் கரிய கரம் - என பல யாவும் அழிய கடவது. மௌநித்துவிடுகிறேன்.
மன்னியுங்கள். இது எனது தன்மை அல்ல. இது என்ன? உங்களுக்காக என்னால் வாழ முடியாது. நான் பேசி கொண்டே தான் இருப்பேன். வார்த்தைகளால் என் இரைப்பை நிரப்புவேன். இறுதி எச்சரிக்கை. உங்கள் செவிப் பறைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். ஆதி மனிதன் அலறிய முதல் வார்த்தையை இப்போது நான் ஓலமிட்டு கத்தப்போகிறேன்.
ஆனால் அண்மை கால பெருவெளியில், என்னை நானே மௌனத்தின் குகைக்குள் நடுங்கும் கரத்தால் ஒளித்து, ஒளிந்து பதுங்கி கொள்கிறேன். ஏதேனும் சொல் யாரேனும் ஒருவரை கிழித்துவிட கூடாது என்பதால். உண்மையின் சுவை உவர்க்கும் என்பதால். ஆள்காட்டி விரல் வியர்க்கும் என்பதால். வார்த்தைகளின் வெப்பநிலை தாளாமல் சுற்றம் சுட்டுவிடும் என்பதால்.
வானம் பெரிது. யாவருக்காகவும் மழை பொழியட்டும். காற்றின் தாள்களில் நிரந்தரமாய் நிர்வாணம் எழுதிவிடுகிறேன்.எழுதுகோல் , எரிமை, எழுத்து, எழுதும் என் கரிய கரம் - என பல யாவும் அழிய கடவது. மௌநித்துவிடுகிறேன்.
மன்னியுங்கள். இது எனது தன்மை அல்ல. இது என்ன? உங்களுக்காக என்னால் வாழ முடியாது. நான் பேசி கொண்டே தான் இருப்பேன். வார்த்தைகளால் என் இரைப்பை நிரப்புவேன். இறுதி எச்சரிக்கை. உங்கள் செவிப் பறைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். ஆதி மனிதன் அலறிய முதல் வார்த்தையை இப்போது நான் ஓலமிட்டு கத்தப்போகிறேன்.
Monday, July 5, 2010
Im Sick again :-(
தொலைதூர தீவில் தனிமையில் இனிமையாக உடல் நலிவை எதிர்க்கொள்வது சிக்கலானது. :-(
Mis u mom. Mis u akka.
Mis u mom. Mis u akka.
Thursday, July 1, 2010
happy bday
இன்று ஜூலை ஓன்று. அடியேன் அவதரித்த திருநாள். தொடர்ச்சியான வாழ்த்துக்கள் வந்துக்கொண்டே உள்ளன. எனது ஆகப்பெரிய சொத்து நண்பர்கள் மட்டுமே. வாழ்வில் நிறைய நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்துள்ளேன்..
Thursday, April 29, 2010
முடி சூடா மன்னன்
Friday, February 5, 2010
!@#*%$
a farkjuy caro drjaat harvazz uojhk qeeerty ohurn padent gepx iyakquvalers kedem hfhgfd afesf ngnh vnyfd nhgjh.........im sick.
Subscribe to:
Posts (Atom)
